Translate

புதன், 3 அக்டோபர், 2012

மதிப்பிற்க்குரிய வைரஸ்களுக்கு....

மதிப்பிற்குரிய வைரஸ்களுக்கு,
                   ஏன் இந்த கோழை வெறி?பதிவுகளும் கருத்துகளும் மட்டுமே சண்டையிட்டு கொள்ள வேண்டிய இடங்களில் ஏன் இந்த வைரஸ் வெறி?

எந்த ஒரு உயிருக்கும்  சுதந்திரம் எவ்வளவு அவசியம் என்பதை எங்கேனும் அடிமையாக இருக்கும் பட்சம் நன்றாக உணரமுடியும்.அவரவர் சுதந்திரத்திற்காக அவரவர் எங்கேனும் போராடிக் கொண்டுதான் உள்ளார்கள்.மாதமானால் சம்பளமும் போனசும் வாங்கி கொண்டு காலாட்டி டிவி பார்க்கும் நமக்கு அவர்களை குறித்து ஏன் இந்த வெறுப்பு வாதம்?

உங்களை தவறாக எழுதியிருந்தால் மறுப்பு தெரிவிக்கலாம்.சுட்டிக்காட்டலாம்.ஆனால் ஒட்டு மொத்தமாக அழிக்க நினைப்பதன் மூலம் தனது தவறு வெளியே தெரிய கூடாது என்ற ஆத்திரத்தை காட்டுவதோடு எழுதப்படும் நிகழ்வுகள் உண்மைதான் என்று மறைமுகமாக சொல்கிறீர்கள் எனபதை உணர்கிறீர்களா?

நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு அழித்தொழிப்பும் உணமைகளின் வீரியத்தை இன்னும் வேகமாக எடுத்து செல்லும் என்பதுதான் உண்மை.

சேகுவேராவின் இந்த வார்த்தைகள் அவருக்கு பொருந்துவது போல உலகில் பதியப்படும் அனைத்து "உண்மைகளுக்கும்" கூட  பொருத்தமாகவே இருக்கும்.

உண்மைகள் அழிக்கப்படலாம்.ஆனால் தோற்ககடிக்கப்படாது.

உடனடியாக தைரியமாக எனது தளத்தில் வைரஸ்கள் குறித்து தகவலும் அதை தொடர்ந்து உடனடியாக எச்சரிக்கை பதிவுவைரஸ் பரப்பும் பதிவுலக போலிகள் தந்த சகோ அப்துல் பஷித் அவர்களுக்கும் ,அவரை போலவே எச்சரிக்கை தந்த ஆஷிக் அவர்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும்  மனமார்ந்த நன்றிகள்.

37 கருத்துகள்:

  1. இந்த அறிவாற்றலை நல்ல விசயங்களுக்கு பயன்படுத்திக்கொண்டாலாவது உருப்படும்..

    /// நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு அழித்தொழிப்பும் உணமைகளின் வீரியத்தை இன்னும் வேகமாக எடுத்து செல்லும் என்பதுதான் உண்மை. ///

    ...ம்... அந்த துணிச்சல் இருக்கட்டும்...

    அப்துல் பஷித் அவர்களுக்கு மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
  2. //ஏன் இந்த கோழை வெறி?

    ஆத்திரத்தை காட்டுவதோடு எழுதப்படும் நிகழ்வுகள் உண்மைதான் என்று மறைமுகமாக சொல்கிறீர்கள் எனபதை உணர்கிறீர்களா?

    நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு அழித்தொழிப்பும் உணமைகளின் வீரியத்தை இன்னும் வேகமாக எடுத்து செல்லும் என்பதுதான் உண்மை//



    திரு. சதீஷ் செல்லத்துரை அவர்களே.

    உண்மை உரைத்தீர்கள்

    .

    பதிலளிநீக்கு
  3. நண்பரே!

    என்னுடைய கணிப்பு சரியென்றால், அவர்கள் எந்தெந்த தளங்களில் இது போல செய்துள்ளார்கள் என்பதை கவனியுங்கள்.

    பொதுவாக ஒரு தளத்தில் வைரஸ் இருந்தால் நாம் என்ன செய்வோம்? அந்த தளங்களுக்கு பிறகு செல்ல மாட்டோம். வைரஸ் லிங்க் உள்ள குறிப்பிட்ட தளங்களுக்கு வாசகர்கள் செல்லக் கூடாது என்பதற்காகவே இதுபோன்று மோசமான செயலை செய்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  4. தமிழ்மணம் ஓட்டுப்பட்டை பிரச்சனை தொடர்பாக, இந்த பதிவில் உள்ளபடி செய்யவும்.

    http://www.bloggernanban.com/2010/12/blog-post.html

    பயப்பட வேண்டாம், லிங்க் இல்லை, text-ஆக தான் கொடுத்துள்ளேன்.

    :D :D :D

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயப்பட வேண்டாம், லிங்க் இல்லை, text-ஆக தான் கொடுத்துள்ளேன்.

      இன்றே முயற்சிக்கிறேன் நண்பா,ஆனாலும் இந்த text....ஹாரிக்கென்ன சிரித்து விட்டார்...எனக்குத்தானே தெரியும் என் கஷ்டம்...இருங்க ஹாரி, பெரிய பூச்சி ஒன்னை பிடிச்சி விடுறேன்...:)

      நீக்கு
    2. அண்ணா உங்க எல்லா பதிவையும் நான் வாசிச்சு கொண்டு தான் வருவேன். ஆனா வழமை போல SILENT READER தான்.. உண்மையிலே உங்க மனசுல இருந்தத எழுதி இருந்திங்க.. பலது உண்மையிலே உங்க பார்வையில இருந்து வந்த கருத்துக்களா இருந்திச்சு.. முதல்வாட்டி வாசிச்சாப்போ எனக்கு சின்ன சறுக்கலும் தெரியல.. ஆனா ஒவ்வொருவரும் அந்த பதிவை அணுகின முறை ரொம்ப வித்தியாசமா இருந்திச்சு.. ஸோ அண்ணன் பிரபல பதிவர் ஆக போறார்னு (ஹி ஹி) விட்டுடேன் ஓட்டு ஒண்ண குத்திட்டு..

      ஆனா இன்னொன்று அண்ணா உங்கள எதிர்கிறவண்ட நோக்கம் "அவன குறிச்சு நீங்க கொஞ்சம் டென்சன் ஆகணும் உங்கள கொஞ்சம் ஆட்டி வைக்கணும் என்றது தான்.. அதுக்கு பிறகு உங்க ஸ்டைல விட்டு அவனுக்காக/அவர்களுக்காக யோசிச்சு பதிவுகள் எழுத தொடங்கிருவீங்க.. அண்மையில் இப்படி பல சம்பவங்கள் நல்ல எழுத்துக்கள் கொண்ட பதிவர்களை கூட கொலவெறியோட அலைய வைச்சு இருக்கு" ஸோ இப்படி வர பிரசினைகள நாம கொஞ்சம் கூட சட்டை பண்ணாம போய் கிட்டே இருக்கணும்.. என்னுடைய தாழ்மையான கருத்து நீங்க இந்த பதிவை தவிர்த்து இருக்கலாம் என்றது தான்.. காரணம் உங்க பதிவை கொண்டு பாசித் எழுதிய "வைரஸ் போலிகள்" பதிவுக்கு கிடைச்ச வெற்றியிலே தெரியும் அதோட ஆதரவு.. ஸோ நீங்க உங்க ஜோர்ணர வழமை போல தொடர்ந்து இருக்கலாம்..

      இருந்தாலும் அண்ணனுக்காக ஒரு பெரிய வலையொன்று பதிவுலக வைரஸ்களை மொத்தமாக கொத்து கொத்தாக பிடிக்க பாரஸ்ட் டிப்பார்ட்மெண்டில் ஏற்பாடு செய்ய படுகிறது. (வலைக்கும், பாரஸ்ட் டிப்பார்ட்மெண்டுக்கும் என்னய்யா சம்மந்தம்??)

      நீக்கு
    3. உண்மைதான் ஹாரி,OMG,சுந்தரப்பாண்டியன்,இன்னுமொரு சிறுவர்களை விரட்டிய கார்ப்பரேட் கட்டிடம் என்று பதிவு எழுத நினைத்திருந்தேன்.ஆனா அப்படியே திரும்பிருச்சு.

      எப்படிப்பா ஓட்டு போடுறீங்க?எனக்கு ஒண்ணுமே புரியலை.ஓட்டு பட்டை இல்லாம எப்படி இதெல்லாம்?உன்னோட தாழ்மையான கருத்தை தலை தாழ்த்தி ஏற்று கொள்கிறேன்.

      ##(வலைக்கும், பாரஸ்ட் டிப்பார்ட்மெண்டுக்கும் என்னய்யா சம்மந்தம்??)### அவங்ககிட்ட தான் கேட்கனும்.


      நீக்கு
  5. @இக்பால் செல்வன்

    // கஸ்மீர் விவகாரத்தில் சுபியிடம் சொன்னது இங்கும் சொல்கின்றேன். கஸ்மீர் என்பது இறையாண்மை உடைய ஒரு தேசமாகும். அதனை இந்தியா, சீனா, பாகிஸ்தான் கூறு போடுவதில் எமக்கு விருப்பம் இல்லை. அல்லது மத அடிப்படையில் பிளவுப்படுத்துவதிலும் விருப்பம் இல்லை. ஐநா சபையின் கண்காணிப்பில் தேர்தல் நடத்தப்பட்டு மக்களின் விருப்பத்துக்கு அமைய முடிவுக்கு வருவது மிகச் சிறந்தது.//

    முதல் தடவையாக உங்களை நான் வழிமொழிகிறேன்... பாகிஸ்தானுடன் சேர்ந்து நாமும் ஆக்கிரமிப்பு செய்துவிட்டு, என்னமோ சொந்த தேசம் போல் உரிமையுடன் பேசுவது நேர்மையாளரக்ளுக்கு வெட்கக்கேடு... காஷ்மீர் பற்றி வாய் கிழிய பேசும் தேச பக்தர்கள், பொது மக்கள் நலனுக்காக ரோடு போடவோ அல்லது கழிவு நீர் குழாய் அமைக்கவோ ஒரு அடி இடம் கேட்டால் கோர்ட்டில் கேஸ் போடுவார்கள்... யாராக இருந்தாலும் நீதியின் பக்கமே நில்லுங்கள்.. அது தான் மனித நேயத்துக்கு அல்லது இறைஅச்சத்திற்க்கு நெருக்கமானது... நீதியின்றி பேசும் மனிதன் செத்த பொணத்துக்கு சமம்... (சென்ற பதிவிற்க்கான பின்னூட்டம், அவசியம் கருதி இங்கேயும் போட்டிருக்கிறேன்)

    பதிலளிநீக்கு
  6. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேற்கண்ட கருத்து எனது "UNMAIKAL"பெயரால் போலியாக ஆள்மாறாட்டம் செய்து விஷமி ஒருவனால் இடப்பட்டிருக்கிறது.


      க‌ருத்தின் உள்ள‌ட‌க்க‌த்தை த‌ன் பெய‌ரால் ப‌திவு செய்ய‌ வேண்டிய‌து தானே?

      ஏன் "UNMAIKAL" என்ற‌ என் பெய‌ரை ப‌ய‌ன்ப‌டுத்தி என் பெய‌ரின் அடையாள‌மான த‌ங்க‌ த‌ராசையும் காப்பி செய்து போட்டு "UNMAIKAL" ன் கால்களின் இடுக்கில் அடைக்க‌ல‌ம் தேட‌ வேண்டும்?


      ==============================

      பதிவர்களே, வாசகர்களே,

      தாங்களுடைய கவனத்திற்கு

      "UNMAIKAL" பெயரில் அசல் "UNMAIKAL" அடையாளமான தங்க தராசு படத்தையும் காப்பி செய்து போட்டு

      ஆள்மாறாட்ட‌ம் செய்து

      தீய நோக்கத்துடன் "UNMAIKAL" பெயரில் போலியாக‌
      வ‌லைத்தள‌ங்க‌ளில் க‌ருத்துக்கள் பதிவு செய்ய ஆர‌ம்பித்து விட்டார்க‌ள் விஷ‌மிக‌ள்.
      -------------------------
      அச‌ல் " "UNMAIKAL"

      IF YOU CLICK UNMAIKAL IN COMMENT

      THE PROFILE SHOULD APPEAR LIKE BELOW


      http://www.blogger.com/profile/14079258396999150015

      THIS IS TRUE UNMAIKAL BLOGGER ID.


      UNMAIKAL


      View Full Size

      On Blogger since October 2011

      Profile views - 526

      About me

      --------------------


      IF YOU CLICK "UNMAIKAL" IN COMMENT BY THE FORGERER

      THE PROFILE SHOULD APPEARING LIKE BELOW


      THIS IS FALSE / FORGERY UNMAIKAL. PROFILE.


      ஆள் மாறாட்ட‌ போலி “UNMAIKAL”


      http://www.blogger.com/profile/16399483917260181454

      Profile Not Available

      The Blogger Profile you requested cannot be displayed. Many Blogger users have not yet elected to publicly share their Profile.


      If you're a Blogger user, we encourage you to enable access to your Profile.

      Help Centre | Terms of Service | Privacy | Content Policy | Developers

      Copyright © 1999 – 2012 Google




      =================================================

      அச‌ல் " "UNMAIKAL" BLOGGER ID:

      http://www.blogger.com/profile/14079258396999150015

      ==========================================

      ஆள் மாறாட்ட‌ போலி
      FORGED: “ UNMAIKAL “ BLOGGER ID:

      http://www.blogger.com/profile/16399483917260181454




      நீக்கு
    2. UNMAIKAL சாத்தானே, எதுக்கு இப்ப முதலை கண்ணீர் விடுறே. இந்த பேர் நீ copyright வாங்கி இருக்கியா. நீ நிறுத்தா வரை இது தொடரும்.

      நீக்கு
    3. அடப்பாவிங்களா? படிச்ச அறிவை எப்படிலாம் தவறா பயன்படுத்துறாங்க?

      நீக்கு
  7. சதீஷ் செல்லத்துரை,

    உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

    முஸ்லிம்கள் மீதான வெறுப்பு வேறொரு கோணத்தில் வெளிப்படுவது கண்டு இவர்கள் மீது பரிதாபமே வருகின்றது. உங்கள் தளம் மட்டுமல்லாது வருண் மற்றும் சுவனப்பிரியன் தளங்களிலும் தங்கள் வேலையை காட்டியிருக்கின்றார்கள்.

    போலி வோட்கள் இத்யாதி இத்யாதி என்று முயன்று பார்த்துவிட்டு ஒன்றும் வேலைக்கு ஆகாததால் இப்போது வைரஸ் பக்கம் வந்திருக்கின்றார்கள். அசத்தியம் அழிந்தே தீரும் என்ற சொல்லுக்கேற்ப இதுவும் நிச்சயம் அழிந்தே போகும்.

    இத்தனை நாட்களாக பதிவுலகில் கேவலமான வழிமுறையில் முஸ்லிம்கள் மீது எத்தனை எத்தனை தாக்குதல்கள் (ஆரோக்கியமான விமர்சங்களை என்றுமே வரவேற்கின்றோம்). பழிக்கு பழி என்ற நிலைக்கு இதுவரை எங்களை இட்டுசெல்லாத இறைவனுக்கே நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றோம். இவர்களின் (இப்பதிவில் சொல்லப்பட்டுள்ள) இவ்வாறான அட்டூழியங்களை கண்டு இனியும் எங்களுக்கு பொறுமை தர வேண்டுமென்றே இறைவனை பிராத்திக்கின்றோம்.

    இப்படி செய்தவர்கள் தமிழர்களாக இருந்தால் நாம் அனைவருமே வெட்கப்பட வேண்டும் என்று வருண் நேற்று பாசித் பதிவில் சொன்னார். ஆனால் கேடுகெட்ட புத்திகாரர்களுக்காக நம் இனம் என்ன செய்யும்? இப்படியானவர்கள் நம் இனத்தில் பிறந்தது எம் இனத்தின் தவறா? இல்லை, அவரவர் செய்த தீமை அவரவர்கே.

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    பதிலளிநீக்கு
  8. என்ன செஞ்சாலும் யாரும் பதிவு போடாம இருக்கப் போறது இல்லை.. ஒரு ஆள் போனாலும் இரண்டு பேர் வருவார்கள்.. இந்த சண்டைகளினால் அதிகம் பயன் அடைந்தது நாங்கள் தான்... 5 புதிய பதிவர்கள் உருவாகி இருக்கிறார்கள்... விரைவில் காணலாம்.. இன்னும் புதிது புதிதாக பதிவர்களை கொண்டு வருவோம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸலாம்

      உங்க வாக்கு மெய்யாக போகுது ... நான் ஒரு ப்ளாக் தொடங்க போறேன் ...

      தொழில் நுட்பம் பத்தி ... ஆனால் கொஞ்ச நாள் ஆகும் ...

      பிளாக்கர் நண்பன் முந்திருவீனோ ன்னு எனக்கே பயம் ஆகா இருக்கு

      நீக்கு
  9. ரொம்ப நாளாச்சே... கொஞ்சம் பதிவுலகத்த எட்டிப் பாக்கலாம்னு வந்தா இங்க பெரிய விவகாரமே நடக்கு போல இருக்கே..! நீங்களும் பிரபல பதிவர் ஆயிட்டீங்க போல.!

    ஊர்க்காரங்குத அக்கறைல சொல்லுதண்ணே.. பாத்து உசாரா இருங்க.. நம்மள சுத்தி குள்ள நரிவளும் கோட்டி நாய்வளும் நெறய இருக்குண்ணே..!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னண்ணே நீங்களும்லா ஓட்டுறியலே...ஒரு விவகாரமும் இல்லண்ணே ...எல்லாம் நல்லாதாவே நடக்கும்....இத்தன நாளா எங்கவே இருந்தீக?இனிமேயாச்சும் சரியா வந்து போயி இரும்..சரியா..:)

      நீக்கு
  10. சதீஷ் அண்ணே! உடனடியாக கம்மென்ட் மாடரேஷன் வைக்கவும்.

    பதிலளிநீக்கு
  11. வைத்துவிட்டேன் சகோ....நன்றி சகோ தங்களின் தொடர்ச்சியான கண்காணிப்புக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணே நீங்க நாட்டை காப்பாத்த பிறந்தவரு அவரு பிளாக்க காப்பாத்த பிறந்தவரு..

      நீக்கு
  12. //ஏன் இந்த கோழை வெறி?//

    ஹா..ஹா...! பொறுத்தமான கேள்வி!

    //உண்மைகள் அழிக்கப்படலாம்.ஆனால் தோற்ககடிக்கப்படாது//

    அழகான, அனுபவப் பூர்வமான உண்மை! தீயவர்கள் எப்போதும் ஜெயிப்பதில்லை சகோ. அடுத்தவர்களுக்கு தீங்கு செய்பவர்களை அடையாளம் காட்டுவதன் மூலம் நாம் எச்சரிக்கையாக இருந்துக் கொள்வோம். நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  13. யார் என்று தெரிகிறதா இவன் தீ என்று புரிகிறதா.....
    பிரபல பதிவரே வாழ்த்துக்கள்.. கடந்த சில நாட்களாக உடல் நிலை சரி இல்லை, பதிவுகள் பக்கம் தலை வைத்து கூட படுக்கவில்லை, காரணம் அந்த தலை வலி தான்...
    பதிவுலகில் ஒரு போர்களமே நடந்த்ருக்கு போல....
    ஹரி சொல்லிய கருத்துக்கள் மிக முக்கியமானவை.... கவனத்தில் கொள்ளுங்கள் இல்லையேல் அவனைக் கொல்லுங்கள்.. பயபுள்ள என்னா பேச்சு பேசுறான்.

    பாசித் பாய் யு திட் எ கிரேட் ஜாப்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கிரேட் ஜாப் // இவர் யாரு ஸ்டீவ் ஜாப்.ட தாத்தாவா?

      நீக்கு
    2. சீனு சீக்கிரம் பதில் சொல்லுப்பா ...உனக்கு கேள்விகள் இங்கேயே ஆ ரம்பம்....

      நீக்கு
  14. உடல்நிலையை கவனித்து கொள் தம்பி ,முதலில் ஒரு கல்யாணத்தை பண்ண பாரு.எல்லாம் சரியாயிடும் ஹாரி கரெக்டாதான் சொல்றாப்ல.
    பாசித் இல்லேன்னா சங்குதான் இந்த தம்பிக்கு ...விவரமான அருமையான ப்ளாக்கர்நண்பர் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //முதலில் ஒரு கல்யாணத்தை பண்ண பாரு// அது என்ன முதல் என்று வருகிறது அப்போ ரெண்டாவது மூன்றாவது என்று பண்ணி கொண்டு போகலாமோ?

      நீக்கு
    2. அடுத்து நீங்க பொசுக்குனு கல்யாணம் பண்ண வைக்க முடியாது அப்புறம் கவிதா.வோட வாழ்க்கை என்னாகிறது? கவிதா யார் என்று http://tamilmottu.blogspot.com/2012/10/blog-post_4974.html மூலம் அறியலாம். அடுத்து அந்த ஊர் காரர்கள் எல்லாம் பயபுள்ளைய கல்லால அடிக்க தேடி கிட்டு இருக்கிறாய்ங்க..

      நீக்கு
    3. முதலில் ஒரு கல்யாணம் பண்ணினாலே போதும் அதுக்கப்புறம் எவனுக்கும் ரெண்டாவது மூணாவது கல்யாணம் பண்ணனுமானு கேட்டு பாருங்க

      கவிதா கவிதா...அதுதான் பையனுக்கு உடம்பு சரியில்லையோ?

      நீக்கு
    4. அது எப்படின்னே என் வாயால உண்மைன்னு சொல்ல முடியும்..

      நீக்கு
    5. குறைந்த பட்சம் சீனு வாயாலேயே சொல்ல வைங்கப்பா....

      நீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கே எழுதலாம்....