Translate

திங்கள், 10 செப்டம்பர், 2012

ஜெயலலிதாவை ஆபாசமாக சித்திரம் வெளியிட்டது நட்பு நாடான இலங்கையின் பத்திரிகை

ஒரு பெண்ணென்றோ ஒரு தாயின் அகவை என்றோ 6 கோடி மக்களின் முதல்வர் என்றோ என எந்த ஒரு வகையிலும் கருதாமல் தன்னை ஒரு மனித பிறவியாக கூட நினைக்காமல் தமிழ் நாட்டு முதல்வர் ஜெயலலிதாவை மிக மிக மிக மிக மிக மிக மிக மிக கீழ்த்தரமாக கேலி சித்திரம் வரைந்து தன் இனவெறி பசிக்கு இரை போட்டுள்ளான் ஒரு சிங்கள கார்டூனிஸ்ட்.அதை பிரசுரித்து உள்ளது LAKBIMA NEWS என்ற பத்திரிகை. இலங்கையின் இன வெறிக்கும் இன வெறி இறையாண்மைக்கும் குடை பிடிக்கிறது இந்திய அடிமைகள்.


Add caption

வெறி பிடித்த கார்டூனிஸ்ட்   Hasantha Wijenayake 

நாராயண சாமி ,போபண்ணா ,ஞான தேசிகன் என்ன சொல்வார்கள்?நட்பு நாடு கலைகளில் சிறந்து விளங்குகிறது என்றா?

நடு நிலை ஞானி இங்கு எங்கே நடுநிலை தேடுவார்?இதன் மூலம் ஒட்டு மொத்த தமிழ் வெறுப்பை காட்டியுள்ள சிங்களத்தானிடம் எந்த நியாயத்தை எதிர்பார்ப்பார்?

சுப்பிரமணி சுவாமி என்ன சொல்லுவார்?

சோ என்ன அறிவுரை வழங்குவார் ஜெயலலிதாவிற்கு?

மாட்டுக்கறி விசயத்தில் நக்கீரன் அலுவலுகத்தை அடித்து நொறுக்கிய அதிமுக அதிரடி ரத்தங்கள் ஆழ்வார் பேட்டையில் உள்ள இலங்கை தூதரகத்தை அடித்து நொறுக்குவார்களா?


 இந்த சித்திரங்களை பாருங்கள் ...

இந்தியாவின் தற்போதைய நிலையை படம்பிடித்து காட்டும் சித்திரங்களை வரைந்த அசிம் திரிவேதி அவர்களின் சித்திரங்களை காணுங்கள்.முகத்தில் அடிக்கும் உண்மையை ஏற்று கொள்ளாமல் பிரிவினையை தூண்டுவதாக வழக்கு பதிவு செய்துள்ளது இந்திய அரசு..இந்தியாவின் சட்ட திட்டங்கள் வெளியுறவு கொள்கைகள் அனைத்தும் கீழ் மட்ட மக்களின் முதுகில் குத்துவதிலும் அடக்கி ஆள்வதிலுமே சிறந்து விளங்குகிறது.

இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கம் என்ன சொல்ல போகிறதோ தெரியவில்லை .இந்த நிகழ்வு மூலமாவது ஜெயலலிதா இலங்கையின் கோர முகத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.சிங்களர்களின் தமிழ் வெறுப்புக்கு இது ஒரு சாட்சியாகும். 

குறிப்பு: அந்த சித்திரத்தை இந்த பதிவில் வெளியிடுவதை  தவிர்த்திருக்கலாம்.ஆனால் அதன் வீரியத்தை அது இல்லாமல் உணர்வது என்பது முடியாத ஒன்று.எனவே மன்னிகவும்.பொறுத்தருள்க.முடிந்தால் இலங்கை தூதரகத்திற்கு தொலை பேசி மூலமாகவோ இல்லை வேறு வழிகளிலோ உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யலாம்.

Sri Lanka Deputy High Commissionmore. 
196, TTK Road, Alwarpet.
Chennai, Tamil Nadu 600018.
0091 - 44- 2498 7896. 

34 கருத்துகள்:

  1. கேலி சித்திரங்களுக்கு கட்டற்ற சுதந்திரம் இருக்கின்றது, என்ற போதிலும் இவ்வளவு கேவலமாக சித்தரிக்கவேண்டியதில்லை என்றே எனக்குத் தோன்றுகின்றது. மன்மோகன் சிங்கையும், ஜெயலலிதாவையும் இந்தக் கோணத்தில் சித்தரித்த லக்பிம பத்திரிக்கைக்கு எமது கண்டனங்கள் ... மன்மோகன் சிங்க, ஜெயலலிதாவுக்கு தனிப்பட்ட ஆதரவுகள் எமக்கில்லை என்ற போதும், எமது மாநிலத்தின் ஆட்சியாளரையும், எமது தேசத்தின் ஆட்சியாளரையும் கேவலப்படுத்த முனைந்திருப்பது எமக்கு வேதனை தருகின்றது ..

    சிங்கள அரசுக்கு அடிவருடும் மத்திய அரசும், உள்ளூர் கேலிச் சித்திரங்களின் குரல்வளையை நசுக்க முனையும் காங்கிரஸ் அரசும் . வன்முறையை கையில் எடுத்து கேலிச்சித்திரர்களின் கட்டற்ற சுதந்திரத்தை அடக்க முனைந்த அதிமுக அரசும் - சிங்களவர்கள் காலடியில் மண்டியிடத் தான் போகின்றது என்பது மட்டும் நமக்குத் தெரியும் ... !!!

    பதிலளிநீக்கு
  2. எமக்கும் இந்த அரசியலவியாதிகளின் மீது எந்தவித தனிப்பட்ட ஆதரவுகள் இல்லை என்பதை விட எதிர்ப்புகள் நிறைய நிறைய உள்ளன.ஆனால் இந்த சித்திரம் மிக கேவலமான ஒன்று என்பதும் அருவருப்பான ஒன்றாகவும் உள்ளது என்பதால் பெருத்த கடுப்பை தந்துள்ளது.

    இங்கே ஊடக சுதந்திரத்திதை நசுக்கும் அரசுகள் என்ன செய்ய போகிறது இப்போது?ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடுப்பரா?

    தங்களின் கருத்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி இக்பால் செல்வன் அண்ணா..

    பதிலளிநீக்கு
  3. எனக்கு ஜெ யின் மீது அவ்வளவு விருப்பில்லை எனினும் இது ரொம்ப அதிகம் தான் எனது கண்டனங்களும் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் ஜெ விருப்பமில்லைதான் ஆனால் இது ஒரு கேவலமான கண்டனத்திற்குரிய கேலி சித்திரம்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரேம் குமார் நண்பரே

      நீக்கு
  4. மன்மோகன் நிலைமையும் ஆனதோ பரிதாபம் தான் இந்த கார்ட்டூனில் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேசா சிங்கத்துக்கு இப்பவாவது பேச்சு வருகிறதா என்று பார்ப்போம்...

      நீக்கு
  5. மனித தன்மையற்ற அரக்கர்கள் தாங்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்கள்
    இந்த அநாகரீகமான கார்ட்டூனுக்கு எனது கடுமையான கண்டனங்களும் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கண்டனங்களை ஒரே இடத்தில் எப்படி சேர்ப்பது?வருகைக்கு நன்றி அண்ணா...

      நீக்கு
  6. இலங்கையில் ஜெயலலிதா-மன்மோகன் சிங்கை இழிவுபடுத்தி கார்ட்டூன், பேனர் வைத்த சிங்களர்கள்

    திங்கள்கிழமை, செப்டம்பர் 10, 2012, 9:56 [IST]
    Posted by: Vadivel

    சென்னை: தமிழக முதல்வரையும் பிரதமர் மன்மோகன் சிங்கையும் படு அநாகரீகமாகவும், மகா கேவலப்படுத்தியும் சிங்கள இனவெறியர்கள் இலங்கையின் பல பகுதிகளில் பேனர் மற்றும் கார்ட்டூன்களை வைத்துள்ள செயல் தமிழர்களை கொதிப்படைய வைத்துள்ளது.

    தமிழ் இனப் படுகொலைக்கு எதிராகவும், இலங்கை அரசுக்கு எதிராகவும் தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா துணிச்சலுடன் பல முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றினார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்திற்கு வந்த இலங்கை விளையாட்டு வீரர்களை ஜெயலலிதா திருப்பி அனுப்பினார். இந்த செயல் தமிழகத்தில் மட்டுமின்றி, உலகத்தில் உள்ள ஈழத் தமிழ் ஆர்வலர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, முதல்வருக்கு தனி மரியாதையை பெற்றுத் தந்தது.

    இதனால் அவர் மீது கோபம் கொண்டுள்ள சிங்கள இனவெறியர்கள் இலங்கையில் உள்ள சில பகுதிகளில் ஜெயலலிதாவை பலவிதமாக மிகவும் கீழ்த்தரமான முறையில் கேலிச் சித்திரம் வரைந்து ஆங்காங்கே ஒட்டியுள்ளனர்.

    குறிப்பாக ஒரு சிங்கள பத்திரிக்கையில் ஹசந்தா விஜெநாயகே என்ற நபர் முதல்வர்-பிரதமரை வைத்து வரைந்துள்ள மகா மட்டமான ஒரு கார்ட்டூனை போஸ்டர்களாக அடித்து ஒட்டியுள்ளனர்.

    தமிழக முதல்வரையே இவ்வளவு கேவலமாக சித்தரிக்கும் இந்த வெறியர்கள் கைகளில் சிக்கிய தமிழ் இன பெண்களின் நிலை எவ்வாறு இருந்திருக்கும் என சற்று நினைத்து பார்க்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றது.

    ஜெயலலிதாவுக்கு எதிராக இதுபோன்று மிகவும் கீழ்த்தரமான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் தமிழர்கள் என்ற பெயரில் சிங்களவர்களும், தமிழின துரோகிகளான டக்ளஸ் மற்றும் கருணாவின் ஆட்கள் தான் என கூறப்படுகின்றது.

    ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் செயலை அனுமதிக்க முடியாது என்றும், இது போன்ற ஈனச் செயல்களில் ஈடுபட்டவர்களை உடனே இலங்கை அரசு கைது செய்ய வேண்டும் என தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும், மனித உரிமை ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    SOURCE: http://tamil.oneindia.in/news/2012/09/10/srilanka-slanderous-images-jaya-displayed-sri-lanka-161143.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைகள் அண்ணா,இந்த விடயத்தை இரவு தேடினேன்.நான் பதிவிட்ட சூழ்நிலை சொல்ல முடியாதது.குறுகிய நேரத்தில் இட்ட பதிவு.உங்களின் இந்த விடயத்திற்கு மிக மிக நன்றி அண்ணா...

      வருகைக்கும் செய்தி பகிர்வுக்கும் நன்றி அண்ணா..


      நீக்கு
  7. Hasantha Wijenayake

    இவனை பெற்றது ஒரு தாய் தானோ என்று எண்ண தோன்றுகிறது

    இதற்கு அம்மையார் எண்ண செய்வார் என்று பார்போம்.

    அனால் நாம் எப்படி நம் எதிர்ப்பை காட்டுவது?

    இலங்கை தூதரகத்திற்கு தந்தி அடித்தா?

    ஒன்றுக்கும் பிரோஜனம் இருக்காது.
    செவிடன் காதில் ஊதிய சங்கு போல் தான் இருக்கும்.
    மேலும் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக பாதி மக்கள்
    சந்தோஷம் தான் அடைவார்கள்.

    முடிந்தால் நம் மக்கள் (நடு நிலை மக்கள்) மற்றும் ஜே விசுவாசிகள்
    இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்று
    இங்கு வரும் சிங்களர்களை விரட்டி அடிப்பார்கள் அல்லது
    இங்கே இருக்கும் சிங்களர்களுக்கு கேடு விளைவிப்பார்கள்
    அனால் அங்கே அவன் (ஹசன்தா) நன்றாக தான் இருப்பான்.

    இந்த செய்திக்கு சிங்கள அரசு என்ன சொல்கிறது என்பதினை பத்தி பதிவு செய்திருக்கலாம் சதீஷ்.

    கருத்துகள் பதியும் நண்பர்கள் கவனிக்க :
    இப்படி நடந்து விட்டது, நியாயம் இல்லை, ஒரு பெண்ணை இப்படி செய்து விட்டார்கள் என்று
    பின்னுட்டங்கள் போடுவதை தவிர்ர்து, இதற்க்கு என்ன செய்யலாம், தமிழனை/ இந்தியனை ஏளனமாக சித்தரிக்கும்
    இவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்க என்ன செய்யலாம் என்று விவாதித்தல் நல்லது என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே..இது இந்த செய்தி வந்த சில மணி துளிகளிலேயே பதிவு செய்தது...(இரவே)இது வரை இது குறித்து எந்த தகவலும் எனக்கு தெரியவில்லை.தங்களுக்கு தெரிந்தால் தகவல் தரலாம்.இந்திய அரசும் தமிழக அரசும் தன் ஈழ எதிர்ப்பை மாற்ற வேண்டும்..இது ஒரு அப்பட்டமான எடுத்துகாட்டு.பகிங்கர எச்சரிக்கை இலங்கைக்கு அளிக்கப்பட வேண்டும்.ஈழ ஏதிர்ப்பு தமிழர்களும் இதை புரிந்து இலங்கைக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தல் வேண்டும்..தங்களின் மேலான வருகைக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  8. ஜெயலலிதாவை அரசியல் ரீதியாக ஆதரிப்பதில்லை என்றாலும் இந்த கார்ட்டூனுக்கு கடுமையான கண்டனங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் அப்படியே அண்ணா...இது ஜெ என்பதை விட பெண் என்று யோசித்தால் இன்னும் கோபம வரும்....வருகைக்கு நன்றி அண்ணா..

      நீக்கு
  9. ஆண்டாண்டு காலமாக இந்தியாவின் தமிழர்களிடம் இருந்து சிங்களவர்களுக்கு எதிராக வருக்கிற கேள்வி இலக்கம்/கண்டன இலக்கம் 301212139 ..

    மேலே ஒரு சகோதரர் கூறிய போல "இதற்க்கு என்ன செய்யலாம், தமிழனை/ இந்தியனை ஏளனமாக சித்தரிக்கும்
    இவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்க என்ன செய்யலாம் என்று விவாதித்தல் நல்லது என்று நினைக்கிறேன்." இந்த கருத்தையே நானும் சொல்ல விரும்புகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகிங்கர மன்னிப்பு கேட்கவேண்டும் இலங்கையும் பத்திரிக்கையும்...தமிழர்களும் இந்தியர்களும் சிங்கள இன வெறியை புரிந்து கொண்டாலே போதும் பல பிரச்சனைகளுக்கு தமிழகம் ஒன்றாக நின்று போராடலாம்....

      நன்றி ஹாரி நண்பா...

      நீக்கு
  10. ஒன்று பட்டு கண்டனம் தெரிவிப்போம்!

    இன்று என் தளத்தில்!
    பாதைகள் மாறாது! சிறுகதை
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_10.html



    பதிலளிநீக்கு
  11. கண்டிக்கப்பட வேண்டியது... கடுமையான கண்டனங்கள்...

    பதிலளிநீக்கு
  12. கண்டனங்கள்....வருகைக்கு நன்றி அண்ணா..

    பதிலளிநீக்கு
  13. இலங்கை பத்திரிகையில் தமிழக முதல்வர் பற்றி கேவலமான கார்டூன்: நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? கண்டனத்தை உடனே பதிவு செய்க

    http://arulgreen.blogspot.com/2012/09/blog-post_8847.html

    பதிலளிநீக்கு
  14. அஸ்ஸலாமு அலைக்கும்,

    கேடுகெட்ட முட்டாள்கள். இலங்கை அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    பதிலளிநீக்கு
  15. அவன் பிறப்புதான் சந்தேகமாக உள்ளது... பிஞ்சிலே பழுத்த நஞ்சு...

    பதிலளிநீக்கு
  16. அது சிங்கள பிறப்பு அண்ணா.....அப்படித்தான் இருக்கும் போல...

    பதிலளிநீக்கு
  17. மிக மிக கண்டிக்க வேண்டிய ஒன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. banthu அண்ணா மீண்டும் வருகை தந்தமைக்கு மிகவும் நன்றி அண்ணா...

      நீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கே எழுதலாம்....