Translate

சனி, 23 ஜூன், 2012

ROWDY RATHORE -ஒரு சிறுத்தை பார்வை

"ROWDY RATHORE" நம்ம சிறுத்தயோட ஹிந்தி படம்.ஏற்கனவே நம்ம ஊருல மற்றும்  தெலுங்கு தேசத்துல இறங்குற அடி தடி மசாலா படத்தையெல்லாம் இந்தி சேனல்கள் தாறுமாறா டப் பண்ணி ஹிட்டடிக்க அப்பத்தான் புரிஞ்சிருக்கும் போல நம்ம ஊரு மசாலா தோசை மட்டுமில்லை மசாலா படமும் நல்லாத்தான் இருக்குதுன்னு.

சிறுத்தை படம் பாத்து புண்ணாயிருந்த நான் என்ன விலை கொடுத்தாலும் ரவுடி ரதோர் பாக்க கூடாதுன்னு முடிவு பண்ணினாலும் விதி, வேல் குத்தி கொடை புடிச்சி வெட்ட வெளில வெளிக்கி போற மாதிரி கொண்டு போய் தியேட்டருல கொண்டு போய் விட்டுருச்சு.

கதை என்னானா?.......அதுல்லாம் தேவையே இல்லை.பாட்டுக்கு நாயகி இருக்காங்க..நாயகிக்கு நாயகன் இருக்காரு..நாயகன் கூட சண்டை போட வில்லன் இருக்காரு..அவ்ளோதான்.ஆனா சிரிப்பு காட்ட சந்தானம் இல்லை...அதுதான் காஞ்ச புண்ணை கெளரி விட்டுருச்சு.

அக்சய் குமாரை வைத்து பிரபு தேவா இயக்கம் என்பதால் கொஞ்சம் தைரியமாகத்தான் இருந்தேன்.டைட்டிலில் இளையதளபதி விஜய்க்கு நன்றி போடும்போது கொஞ்சம் ஜெர்க்கானாலும் பாட்டுதானே பரவாயில்லை சமாளிச்சிடலாம்னு நம்பி உட்காந்தா சந்தடி சாக்குல பாட்டுலே விஜயை சூப்பர் ஸ்டார்னு பிரபு தேவா இன்ட்ரோ கொடுக்குறாரு...அடிங்கொய்யால யாருகிட்ட ...அது என்ன பச்ச புள்ளைங்க பட்டம் விடுற பவர் ஸ்டார் பட்டமா என்ன?சூப்பர் ஸ்டாருடா! 2000கிலோ மீட்டர் தள்ளி வந்தும் விஜய் தொந்திரவு தாங்க முடியலை..

இந்த  கொடுமை முடிஞ்சு நம்ம சந்தானம் இடத்துக்கு யார் வர்றான்னு பார்த்தா பய புள்ள பொருத்தமே இல்லை.அந்த பயலுக்கு  பதிலா காட்டு பூச்சி இடத்துக்கு காட்டு பூச்சி சந்தானத்தையே போட்டுருக்கலாம்.வாயுள்ள பூச்சி கட்டாயம் பொலைச்சிருக்கும்.சந்தானம்தான் இல்லை... காமெடி?சிறுத்தைக்கு பலமே அதன் பலமான கால்கள்தான்..அதாவது காமெடி.அந்த காலையே ஓடிச்சி போட்ட மாதிரி அங்கங்கே ஒரே காமெடி வெட்டு.மயில் சாமி காமெடி கிடையாது,ஆனா மெனக்கெட்டு வேணாம் அழுதுருவேன் வடிவேல் காமெடிய சேத்துருக்காங்க.

நம்ம நாயகன் வேற நம்ம விஜய்  மாதிரி ஆடுறேன்னு கொடுமை படுத்துராறு.இப்பதான் நம்ம கார்த்தியோட அசட்டு சிரிப்பு  பெருமைலாம் புரியுது.ராக்கெட் ராஜா பாட்டுலாம் சிரிச்சிகிட்டே இருக்கலாம்.இந்தில தேவை இல்லாம அரை குறை ஆடைகளுடன் பொண்ணுங்களை ஆட விட்டு அலங்கோலம் பண்ணிருக்காரு பிரபு தேவா ."சின்காக்கா சின்க்கா சிங்க்கா"இந்த வசனம்{????) படம் முழுக்க வருகிறது.கூடவேஅதுக்கு அர்த்தமில்லாமல் அர்த்தம் கொடுத்து அநர்த்தனம் ஆடுகிறார்கள்.

சிறப்பு என்றால் அது தமிழை விட இந்தியில் ஆக்சன் நல்லா இருக்கிறது.போக்கிரியின் இந்தி படமான WANTEDடில் ப்ளஸ்னா அது ஆக்சன்தான். அதே மாதிரிதான் இதிலேயும்..பிரபு தேவா மெனக்கிட்டிருக்கார்.
பிரபு  தேவா செய்த ஒரு புத்திசாலித்தனமான வேலை என்னனா தியேட்டருக்குள்ளே போகும் முன்னேயே வால்போஸ்டர் மூலமா இது ஒரு 1980 கால மசாலா படம்னு எபக்ட் கொடுத்து எவனையும் லாஜிக் பத்தி பேச விடாம பல்ப் கொடுத்ததுதான்.(அதனாலேயே IT பார்க் சீன் கட்?).

நாயகியை பத்தி சொல்லாமலா?கார்த்தி இடுப்பை கிள்ளுறேன்னு எலும்பை கிள்ளுவார்.இதுல இடுப்ப கிள்ளுதேன்னு அக்சய் குமார் டயரை திருகுகிறார்...ஆமாங்க அவ்ளோ பெரிய இடுப்பு...

இந்த படம் இப்படி தாறு மாறா ஓடுதுனா நம்ம தமிழ்பட இயக்குனர்களின் திறமையா?நம்மை விட முட்டாளாய் மாறும் வடக்கத்தி மக்களின் ரசனையா? காமமும்,காதலும்  உள்ள படம் வந்த வடக்கில் நம்ம  மசாலா படங்கள் மாற்றாய் இருப்பதை விட காதல்,வ எண்,ராட்டினம்,களவாணி,அழகர்சாமி குதிரை இப்படி பல படங்களை வடக்கு சூழலுக்கு ஏற்றார் போல மாற்றி கொடுக்கலாமே..உடனே பிடிக்கலைனாலும் பாக்க பாக்க பிடிக்கலாம்தானே?

அக்சய் குமார் சிரிக்கும் போதெல்லாம் அநியாயத்திற்கு பவர் ஸ்டார் பறந்து வந்து யாருடா அவன் என்னைய போலன்னு அருவா காட்டுறாரு.பவர் ஸ்டாருக்கு இது ஒரு அருமையான வாய்ப்பு.நம்ம ஊருல மசாலா வடைகளும்,தோசைகளும் அதிகம் என்பதால் அவரு பேசாம இந்த சீசன்ல வரிசையா ஒரு நாலு படத்தை ஹிந்தில தட்டி விட்டா சூப்பரா பார்ம் ஆயிடலாம்.அப்புறம் என்ன?காபி வித் கரண்தான்.கோபில்லாம் அண்ணாந்து பாப்பாரு.




கட்ட கடைசியா சீரியஸா ஒரு விஷயம்...ரதோர் என்பது ஒரு ஜாதியின் பெயர்.அது ஒரு ரவுடி பெயருக்கு பின் வந்ததை யாரும் ஆட்சேபிக்கவில்லை.ரவுடி ஜாதி என்பதில் பெருமை கொள்கிறார்களா?இல்லை கண்டுக்காம விட்டாங்களா?வடக்கில் எவ்வளவு படிச்சாலும் ஜாதி பெயரை வைசிக்கிட்டுதான் சுத்துறாங்க.அதையாரும் கேட்க்கிரதில்லை.பிரணாப் "முகர்ஜி",மம்தா "பானர்ஜி",அசோக் "கெலாட்" இப்படி நிறைய சொல்லலாம்.நாளைக்கு முதல் குடிமகனாகும் வாய்ப்பு உள்ள பிரணாப் இன்னும் தன் ஜாதி பெயரை விட வில்லை.


டிஸ்கி:இந்த விமர்சனம்..ஒப்பிடு.. இதுவே இவ்வளவு கொடுமைனா அப்ப படம் எப்படி இருந்துருக்கும்?

13 கருத்துகள்:

  1. //அதுல்லாம் தேவையே இல்லை.பாட்டுக்கு நாயகி இருக்காங்க..நாயகிக்கு நாயகன் இருக்காரு..நாயகன் கூட சண்டை போட வில்லன் இருக்காரு..அவ்ளோதான்.ஆனா சிரிப்பு காட்ட சந்தானம் இல்லை...அதுதான் காஞ்ச புண்ணை கெளரி விட்டுருச்சு.// கலக்கல் அண்ணா

    //அடிங்கொய்யால யாருகிட்ட ...அது என்ன பச்ச புள்ளைங்க பட்டம் விடுற பவர் ஸ்டார் பட்டமா என்ன?சூப்பர் ஸ்டாருடா! 2000கிலோ மீட்டர் தள்ளி வந்தும் விஜய் தொந்திரவு தாங்க முடியலை..// ஆக ஓகோ

    //இதுல இடுப்ப கிள்ளுதேன்னு அக்சய் குமார் டயரை திருகுகிறார்..// வரிக்கு வரி பன்சா

    //அப்புறம் என்ன?காபி வித் கரண்தான்.கோபில்லாம் அண்ணாந்து பாப்பாரு.//


    உங்கள் விமர்சனத்தில் இருந்தே புரிகிறது நீங்கள் அனுபவித்த கொடுமை
    படித்துப் பாருங்கள்

    http://seenuguru.blogspot.com/2012/06/blog-post_23.html

    பதிலளிநீக்கு
  2. நன்றி சீனு...5 நாளா செம வேலை.ஒரு நாளைக்கு மொத்தமே 4மணி நேரம்தான் தூக்கம்.எல்லா களைப்பையும் உன் ஒரு பின்னூட்டம் சரி பண்ணிடுச்சு.நன்றி சீனு.

    பதிலளிநீக்கு
  3. //அக்சய் குமார் சிரிக்கும் போதெல்லாம் அநியாயத்திற்கு பவர் ஸ்டார் பறந்து வந்து யாருடா அவன் என்னைய போலன்னு அருவா காட்டுறாரு.//

    ஹி..ஹி..

    பதிலளிநீக்கு
  4. விமர்சனம் நல்லா இருக்கு நண்பா..

    பதிலளிநீக்கு
  5. thevidiyaaa pasangalaaaa, vijay paththi command panna nee yaarudaa koodhi, baadu, thevidiya, punda mavamey... gngoththaaa neee ajith, surya fan-ah daaa thevidiyaaa payyaaaa

    பதிலளிநீக்கு
  6. thevidiyaaaaaa payyaaaa ,, endha thevidiyaaaa payyan vimarsabnam ezhudhinadhu ,, koodhi

    பதிலளிநீக்கு
  7. விஜய் ரசிகரிடம் வேறென்ன பின்னூட்டம் எதிர்பார்க்க முடியும்?துப்பாக்கி விமர்சனம் படிக்க அவசியம் வர வேண்டுகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சதீஸ் சேர் சூப்பர்
      விஜய்,கருணாநிதி கழுவி கழுவி ஊத்தினாலும் எச்சத்தை துடச்சிட்டு போற பயலுக
      அவங்களுங்கு இப்படி வாலுக

      நீக்கு
    2. சதீஸ் சேர் சூப்பர்
      விஜய்,கருணாநிதி கழுவி கழுவி ஊத்தினாலும் எச்சத்தை துடச்சிட்டு போற பயலுக
      அவங்களுங்கு இப்படி வாலுக

      நீக்கு
    3. சதீஸ் சேர் சூப்பர்
      விஜய்,கருணாநிதி கழுவி கழுவி ஊத்தினாலும் எச்சத்தை துடச்சிட்டு போற பயலுக
      அவங்களுங்கு இப்படி வாலுக

      நீக்கு
  8. வருகைக்கு நன்றி sujeevan thavarajah...இணைந்திருப்போம்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கே எழுதலாம்....